கோவை சிஆர்பிஎப் பயிற்சி கல்லூரி முதல்வராக அஜய்பரதன் பொறுப்பேற்பு

சிஆர்பிஎப் ஐ.ஜி யாக பணியாற்றி வந்த அஜய்பரதன் கோவை சிஆர்பிஎப் மத்திய பயிற்சி கல்லூரியின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.


கோவை: முதுகலை பட்டப்படிப்பை முடித்த அஜய்பரதன் கடந்த 1986ல், சிஆர்பிஎப் கெசட் அதிகாரியாக நேரடியாக நியமிக்கப்பட்டார். மேலும் இவர் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள பஞ்சாப், வட கிழக்கு ஜம்மு காஷ்மீர், சத்தீஷ்கர், மற்றும் நக்சல்கள் தீவிரவாத அச்துறுத்தல்கள் உள்ள இடங்களிலும் பணியாற்றி உள்ளார்.

கோவை சிஆர்பிஎப் பயிற்சி கல்லூரி கமாண்டென்டாகவும், பணியாற்றி கடந்த 2015ல் சிறந்த கல்லூரிக்கான விருதை பெற்றுக்கொடுத்துள்ளார். மேலும் உள்துறை பாதுகாப்பிற்கான பதக்கத்தை 50 ஆவது சுதந்திரதின விழாவின் போது பெற்றுள்ளார்.

இந்த 75 ஆவது சுதந்திரதினத்தின் போதும் பல்வேறு விருதுகளையும், சான்றிதழ்களையும் பெற்ற பெருமையுடையவர். இன்று கோவை சிஆர்பிஎப் பயிற்சி கல்லூரியின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

Newsletter

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...