பல்லடம் அருகே குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்டுவதைக் கண்டித்து தர்ணா

பல்லடம் அருகே குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்டும் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் தர்ணா போராட்டம்.


திருப்பூர்: வடுகபாளையம்புதூர் ஊராட்சியில் குடியிருப்புக்கு அருகே குப்பைகள் தீ வைத்துக் கொளுத்துவதால் சுவாசக்கோளாறு ஏற்படுவதாகப் பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் சல்லடத்தை அடுத்த வடுகபாளையம்புதூர் ஊராட்சி அலுவலகம் அருகே சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.



இந்நிலையில் ஊராட்சி பகுதிகளில் அள்ளப்படும் குப்பைகள் குடியிருப்புக்கு அருகே கொட்டப்பட்டு தீ வைத்துக் கொளுத்தப்படுவதால் துர்நாற்றம் வீசுவதோடு, சுவாசக்கோளாறு ஏற்படுவதாகக் கூறி ஊராட்சி நிர்வாகத்திடமும், வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் மனு அளித்துள்ளனர்.



ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.



இந்நிலையில் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பழைய பொள்ளாச்சி சாலை செல்லும் வழியில் பொதுமக்கள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குப்பைகளை அப்புறப்படுத்தும் வரை போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...