அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர், சொத்துக்களை அபகரித்துவிட்டு கொலை மிரட்டல் விடுவதாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு


கோவையில் கள்ளக்குறிச்சி அ.தி.மு.க  நாடாளுமன்ற உறுப்பினர் காமராஜ், தங்களது சொத்துக்களை அபகரித்து இருப்பதோடு, குண்டர்களை வைத்து கொலை மிரட்டல் விடுவதாக ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த சவிதா, ராஜமாணிக்கம் தம்பதியினர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய ராஜமாணிக்கம், கள்ளக்குறிச்சி அ.தி.மு.க  நாடாளுமன்ற உறுப்பினர் காமராஜ் தனது நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக அபகரித்து இருப்பதாக புகார் தெரிவித்தார்.

மேலும் 20 குண்டர்களை வைத்து தங்களை வீட்டை விட்டு காலி செய்யுமாறு மிரட்டி வருவதாகவும், மின் இணைப்பு, குடிநீர் இணைப்புகளை துண்டித்து அட்டகாசம் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

காவல் நிலையத்தில் 2 முறை புகார் அளித்த போதும் காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறிய அவர், அ.தி.மு.க  நாடாளுமன்ற உறுப்பினர் காமராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...