கோவையில் தாத்தா, பாட்டிகள் தினம் - பாத பூஜை செய்து ஆசிர்வாதம் பெற்ற குழந்தைகள்!

கோவையில் முதியோர்களை போற்றும் வகையில், குழந்தைகள் தங்களது தாத்தா பாட்டிகளை பள்ளிக்கு அழைத்து வந்து, பாதபூஜை செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: மாறி வரும் நவீன உலகில் கூட்டுக்குடும்ப முறை மெதுவாக குறைந்து வருகிறது.



இந்நிலையில், கூட்டு குடும்ப முறையை போற்றும் விதமாகவும், பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், கோவைபுதூர் ஆஸ்ரம் பள்ளியில் தாத்தா பாட்டிகள் தினம் கொண்டாடப்பட்டது.



அதில், பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகள் தங்களது தாத்தா பாட்டிகளை பள்ளிக்கு அழைத்து வந்து அவர்களுக்கு பாதபூஜை செய்தனர்.

தொடர்ந்து, தாத்தா பாட்டி மற்றும் பேரன், பேத்திகளுக்கு உள்ள புரிதலை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு போட்டிகளும் நடைபெற்றன.

இது குறித்து பள்ளியின் நிர்வாக இயக்குனர் கவுரி உதயேந்திரன் கூறுகையில், கூட்டு குடும்ப முறைகள் தற்போது குறைந்து வரும் நிலையில், பள்ளியில் பயிலும் குழந்தைகள் உறவினர்களின் அருமை மற்றும் பாரம்பரிய முறைகள் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதாக தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...