தாராபுரம் நகராட்சி சார்பில் மகளிர் உதவிக்குழுவுக்கு நிதி வழங்கல்

தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட வார்டு பகுதியில் மழை நீர் வடிகால்கள், புதிய கல்வெட்டு அமைக்கும் பணிகளை நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் ஆய்வு.


திருப்பூர்: தாராபுரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் மல்லிகா பெண்கள் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையை நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் வழங்கினார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட 2ஆவது வார்டு பகுதியில் புதிய மழை நீர் வடிகால்கள், புதிய கல்வெட்டு அமைக்கும் பணிகளை நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் ஆய்வு செய்தார்.



பின்பு நகராட்சியின் சார்பாக மல்லிகா பெண்கள் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

இந்த நிகழ்வில், நகர மன்ற தலைவர் பொறியாளர் கு.பாப்புகண்ணன், நகராட்சி உதவிப் பொறியாளர் காளீஸ்வரி, நகராட்சி சமுதாய அமைப்பாளர் நந்தினி பிரியா, சியாமளா, 2ஆவது வார்டு செயலாளர் மோகன்ராஜ், வார்டு அவைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, வார்டு பொருளாளர் ஜெயராஜ், இளைஞரணி துணை அமைப்பாளர் சரத், நகராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில் பாண்டி, நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் லட்சுமணன், வட்ட கழக இன்னாள் முன்னாள் நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...