தாராபுரம் நகராட்சி சார்பில் மகளிர் உதவிக்குழுவுக்கு நிதி வழங்கல்

தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட வார்டு பகுதியில் மழை நீர் வடிகால்கள், புதிய கல்வெட்டு அமைக்கும் பணிகளை நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் ஆய்வு.


திருப்பூர்: தாராபுரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் மல்லிகா பெண்கள் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையை நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் வழங்கினார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட 2ஆவது வார்டு பகுதியில் புதிய மழை நீர் வடிகால்கள், புதிய கல்வெட்டு அமைக்கும் பணிகளை நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் ஆய்வு செய்தார்.



பின்பு நகராட்சியின் சார்பாக மல்லிகா பெண்கள் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

இந்த நிகழ்வில், நகர மன்ற தலைவர் பொறியாளர் கு.பாப்புகண்ணன், நகராட்சி உதவிப் பொறியாளர் காளீஸ்வரி, நகராட்சி சமுதாய அமைப்பாளர் நந்தினி பிரியா, சியாமளா, 2ஆவது வார்டு செயலாளர் மோகன்ராஜ், வார்டு அவைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, வார்டு பொருளாளர் ஜெயராஜ், இளைஞரணி துணை அமைப்பாளர் சரத், நகராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில் பாண்டி, நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் லட்சுமணன், வட்ட கழக இன்னாள் முன்னாள் நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...