உடுமலை வழியாக 20 வருடங்களுக்கு முன்பு இயங்கிய ரயிலை இயக்க கோரிக்கை!

உடுமலை வழியாக 20 வருடங்களுக்கு முன்பு மீட்டர்கேஜ் பாதையின் போது இயங்கிய ரயில்கள் இயக்கும்படி தென்னக ரயில்வே-க்கு பொதுமக்கள் கோரிக்கை.


திருப்பூர்: கோவை-திண்டுக்கல் இடையே 20 வருடங்களுக்கு முன் மீட்டர் கேஜ் ரயில் பாதை இருந்த காலத்தில் இயங்கிய ரயிலை மீண்டும் இயக்கினால் சுமார் 70 லட்சம் மக்கள் பயனடைவார்கள்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை வழியாக 20 வருடங்களுக்கு முன் மீட்டர் கேஜ் ரயில் பாதை இருந்த காலத்தில் கோவை-திண்டுக்கல் இடையே வெற்றிகரமாக ஓடிய பயணிகள் ரயில் சேவையை மீண்டும் துவக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த ரயில் இயக்கப்படுவதன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருக்கும் விவசாயிகள், மாணவர்கள், தினசரி பயணிக்கும் பயணிகள், வணிகர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் இந்த ரயில் இடைப்பட்ட நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து சென்னை, பெங்களூர், ஐதராபாத், கொச்சி மற்றும் பல நகரங்களுக்குக் கோயம்புத்தூர் மற்றும் திண்டுக்கல் வழியாக இரு மார்க்கங்களிலும் செல்வதற்கு வழி வகுக்கும்.

இந்த வழித்தடத்தில் உள்ள பதினான்கு ரயில் நிலையங்களை பயன்படுத்துவதன் மூலம் சுமார் 70 லட்சம் பேர் பயனடைவர். இதன் மூலம் ரயில்வே துறைக்கு நல்ல வருவாய் கிடைப்பதுடன், பயணிகள் பாதுகாப்பாக ரயில்களில் பயணிக்க முடியும்.

இந்த வழித்தடத்தில் கோயம்புத்தூர், போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலை, மைவாடி சாலை, மடத்துக்குளம், புஷ்பத்தூர், பழனி, சத்திரப்பட்டி, ஒட்டன்சத்திரம், அக்கரைப்பட்டி, திண்டுக்கல் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் உள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேலுச்சாமி, சண்முகசுந்தரம், பி.ஆர்.நடராஜன் மற்றும் எம்எல்ஏக்கள் வானதி சீனிவாசன், தாமோதரன், பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை ராதாகிருஷ்ணன், மகேந்திரன், ஐ.பி. செந்தில்குமார். திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் அமைச்சர் சக்கர பாணி ஆகியோர் ரயில் சேவையை உடனடியாக தொடங்குமாறு மத்திய அமைச்சர் ஸ்ரீஅஸ்வினி வைஷ்ணவிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் இந்த ரயில் சேவையை விரைவில் மீண்டும் துவங்கி தென்னக ரயில்வேயின் மதுரை, பாலக்காடு, சேலம் ஆகிய 3 கோட்டங்களும் பொதுமக்களின் நலனுக்காக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...