திருப்பூர் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.49.75 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ.49 லட்சத்து 75ஆயிரம் ரூபாய் பருத்தி விற்பனையானது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனைக்கான மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில், திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த 188 விவசாயிகள், பருத்தியை விற்பனைக்காகக் கொண்டு வந்திருந்தனர்.

பருத்தியினை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த வணிகர்கள் வந்து மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர்.

பருத்தி, அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.8,716-க்கும் குறைந்தபட்சவிலை ரூ.7,200 -க்கும், சராசரி விலை ரூ.8 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

பருத்தியின் மொத்த அளவு 1,872 மூட்டைகள்( குவிண்டால் 635.57). விற்பனையான பருத்தியின் மொத்த மதிப்பு ரூ.49 லட்சத்து 76 ஆயிரத்து 569 என்றும், இந்த மறைமுக ஏலத்தில் 11 வியாபாரிகள் பங்கேற்றதாகவும் திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் கண்ணன் (பொறுப்பு) தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...