சிங்காநல்லூர் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தை மீட்டுத்தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு


சிங்காநல்லூர் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தை மீட்டுத்தரக்கோரி இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 64-வது வார்டு, சிங்காநல்லூர் உழவர் சந்தையின் பின்புறம் விளையாட்டு மைதானம் உள்ளது.

இந்த விளையாட்டு மைதானம் சில தனியார்களால் வாகனங்கள் நிறுத்துவதற்கும், கோவை மாநகராட்சியின் தெருவிளக்கு கம்பங்களை போட்டு வைக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதுமட்டுமில்லாமல் இரவு நேரங்களில் தெருவிளக்குகள் அப்பகுதியில் சரிவர இயங்குவது இல்லை. 

இதனால், அப்பகுதி மக்களும், இளைஞர்களும் விளையாட்டு மைதானத்தினை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றியும், மைதானத்தை சுற்றிவளர்ந்துள்ள புதர்களையும் அகற்றி, விளையாட்டு மைதானத்தை பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...