கோவை கிணத்துக்கடவு அருகே சேவல் சண்டை சூதாட்டம் - 3 பேர் கைது

கிணத்துக்கடவு அடுத்த கோவில்பாளையம் அருகே பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டம் நடத்திய மூன்று பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த சேவல் மற்றும் ரூ.300 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தப்படுவதாக கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், காணியாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன், முள்ளுப்பாடி பகுதியைச் சேர்ந்த பஞ்சலிங்கம் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்த சேவல் மற்றும் 300 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...