கோவை கிணத்துக்கடவு அருகே சேவல் சண்டை சூதாட்டம் - 3 பேர் கைது

கிணத்துக்கடவு அடுத்த கோவில்பாளையம் அருகே பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டம் நடத்திய மூன்று பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த சேவல் மற்றும் ரூ.300 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தப்படுவதாக கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், காணியாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன், முள்ளுப்பாடி பகுதியைச் சேர்ந்த பஞ்சலிங்கம் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்த சேவல் மற்றும் 300 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...