திமுக அரசை டிஸ்மிஸ் செய்யக்கோரி சிவசேனா கட்சியினர் ஜனாதிபதிக்குக் கடிதம்

இந்து மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டு வரும் திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி ஜனாதிபதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு சிவசேனா கட்சியினர் தபால் அனுப்பி வைப்பு.


திருப்பூர்: திமுக அரசை டிஸ்மிஸ் செய்யக்கோரி சிவசேனா கட்சியினர் ஜனாதிபதி உள்ளிட்டோருக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.

திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள தபால் நிலையத்திலிருந்து, அக்கட்சியின் மாநிலத் தலைவர் திருமுருக தினேஷ் தலைமையில் சிவசேனா கட்சியினர் ஜனாதிபதி, உச்சநீதிமன்ற நீதிபதி உள்ளிட்டோருக்குத் தபால் ஒன்றை அனுப்பினர்.



அந்த தபாலில், இந்து மக்கள் புனிதமாகக் கருதும் ராமர் பாலத்தை இடித்து சேது சமுத்திர திட்டத்தை அமைக்க திமுக அரசு முயன்று வருவதாகவும் அத்தகைய இந்து விரோத சேது சமுத்திர திட்டத்தைக் கைவிட வேண்டும் எனவும், தமிழக சட்டசபையில், ராமர் பாலத்தை ஆடம்ஸ் பாலம் என முதலமைச்சர் தெரிவித்ததாகவும்,



அந்த வார்த்தை இந்து மக்களைக் காயப்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் ஆடம்ஸ் பாலம் என்ற வார்த்தையை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் மற்றும் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் இலங்கையிலிருந்து பல்வேறு நாட்டினர் இந்தியாவில் ஊடுருவ வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும்.

ஏழை,எளிய மக்களுக்குப் பயனின்றி பெருமுதலாளிகளுக்கு மட்டுமே இத்திட்டம் லாபம் அளிக்கும் என்பதாலும், சேது சமுத்திர திட்டத்தைக் கைவிட வேண்டும் மற்றும் இந்து விரோத போக்கை கடைப்பிடித்துச் செயல்பட்டு வரும் திமுக அரசை ஜனாதிபதி டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...