உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் பாரம்பரிய வள்ளி கும்மியாட்டம் - கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமூர்த்தி மலையில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற பாரம்பரிய வள்ளி கும்மியாட்டத்தை சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ளது மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான திருமூர்த்திமலை. இங்கு, சுற்றுலா வளர்ச்சித்துறை சார்பில் சிறுதானிய பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.



தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி குழுவுடன் உடுமலை ராயல் அரிமா சங்கம், உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம் ஆகியவையும் இணைந்து இந்த பொங்கல் விழாவை நடத்தினர்.



கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்ச்சிகளாக, பாரம்பரிய வள்ளி கும்மி, குதிரை வண்டி, மாட்டு வண்டி ஊர்வலம் நடைபெற்றது.



காணும் பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற இந்த விழாவில், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் குடும்பத்தினருடன் உற்சாகமாக கலந்து கொண்டு, பாரம்பரிய வள்ளி கும்மியாட்டம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் கண்டுகளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலாத் துறை அதிகாரி ஆனந்தன், வட்டாட்சியர் கண்ணாமணி, மாவட்ட சுற்றுலாத்துறை ஒருங்கிணைப்பாளர், மைவாடி விவேகானந்தா வித்யாலயம் நிறுவனர் மூர்த்தி, உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம் தலைவர் சத்தியம் பாபு, எஸ் எம் டிராவல்ஸ் நாகராஜ், தளிபேரூராட்சி தலைவர் உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...