'எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு கமல்ஹாசன்..!' - கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

எம்.ஜி.ஆரின் 106 வது பிறந்தநாளையொட்டி கோவையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கோவையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு கமல்ஹாசன் என்ற வாசகம் இடம் பெற்றிருப்பதால் பரபரப்பு.



கோவை: தமிழ்நாட்டின் முன்னாள் மறைந்த முதலமைச்சரும், அதிமுகவின் நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 106 ஆவது பிறந்தநாள், மாநிலம் முழுவதும் அதிமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி, அவரது உருவச்சிலை மற்றும் புகைப்படத்திற்கு, பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள், எம்ஜிஆர் ரசிகர்கள், சினிமா துறையினர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.



இந்நிலையில், கோவையில் தெற்கு தொகுதி 80வது வார்டு மக்கள் நீதி மய்யம் கட்சியினர் சார்பில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு லங்கா கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.



அதில், "துணிவு அரசியல் செய்த எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு நம்மவர் கமல்ஹாசன்" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.



அத்துடன் எம்ஜிஆருடன் கமலஹாசன் சிறுவயதில் நடித்த "ஆனந்த ஜோதி" திரைப்படத்தின் புகைப்படமும், எம்.ஜி.ஆர் கமலஹாசனுக்கு விருது வழங்கிய புகைப்படமும் இடம் பெற்றுள்ளன.

எம்.ஜி.ஆர் பிறந்தநாளுக்கு மக்கள் நீதிமய்யம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...