கோவை கோவில்மேடு பகுதியில் அனல் பறந்த கபடி போட்டி

பொங்கல் திருநாளை முன்னிட்டு கோவை கோவில்மேடு பகுதியில் நடைபெற்ற கபடி போட்டியில் ஆக்ரோஷமாக விளையாடி திறமைகளை வெளிக்காட்டிய வீராங்கனைகள்.


கோவை: கோவில்மேடு பகுதியில் இளைஞர் மன்றம் சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு மகளிருக்கான கபடி போட்டி நடைபெற்றது.

கோவை தடாகம் சாலை கோவில்மேடு பகுதியில் இளைஞர் மன்றம் செயல்பட்டு வருகிறது. 1967ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இளைஞர் மன்றம் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளை முன்னிட்டு இருபாலருக்கும் கபடி போட்டி நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நிலையில் 56ஆவது ஆண்டு விழா, மன்றத்தின் புதிய கட்டிடம் திறப்பு விழா மற்றும் தை திருநாள் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாவட்ட அளவிலான ஆண், பெண் என இருபாலருக்கான கபடி போட்டி இன்று தொடங்கியது.



பெண்களுக்கான கபடி போட்டியில் கோவையைச் சேர்ந்த 10 அணிகள் மோதின. இதில் பெண்கள் அணியினர் நேர்த்தியான மற்றும் ஆக்ரோஷமான விளையாட்டை வெளிக்காட்டினர். வேகம், விவேகம் என கபடி விளையாட்டில் பெண்கள் அணியினர் தங்களது திறமைகளைக் காட்டி விளையாடியது பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைத்தது.



பொங்கல் திருநாளை ஊர்மக்கள், பெண்கள் என கபடி போட்டியை கண்டுகளித்துடன் களத்தில் பெண்களின் அனல் பறக்கும் ஆட்டத்தைக் கண்டு வியந்தனர். நாளை நடைபெறும் ஆண்களுக்கான கபடி போட்டியில் கோவையைச் சேர்ந்த 20 அணிகள் மோதவுள்ள நிலையில் ஆடுகளம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் வெற்றி பெறும் அணிகளுக்குப் பரிசுத்தொகையும், கேடயம் மற்றும் கோப்பைகள் பரிசாக அளிக்கப்படவுள்ளது.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...