நீலகிரியில் ரூ.40 லட்சம் மதிப்பு புகையிலைப்பொருட்கள் கடத்தல் - ஓட்டுநர் கைது

நீலகிரி மாவட்டம் கூடலூர் வழியாக லாரி மூலம் கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கேரளாவைச் சேர்ந்த லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை.


நீலகிரி: கர்நாடகா மாநிலத்தில் இருந்து நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள கூடலூர் வழியாக தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. இதனால், நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு தமிழக பதிவு எண் கொண்ட லாரி ஒன்றில், பிஸ்கட்டுகளுடன் சேர்த்து தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்களில் ஒன்றான ஹான்ஸ் கடத்தப்படுவதாக கூடலூர் காவல்துறையினரக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தொரப்பள்ளி சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த லாரியை சோதனை செய்தபோது, கர்நாடகா மாநிலத்தில் இருந்து சுமார் 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. உடனடியாக, லாரி மற்றும் ஹான்ஸ் பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.



மேலும், லாரியை ஓட்டிவந்த கேரளாவை சேர்ந்த சுதிர் என்பவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...