கோவை பூச்சியூரில் கஞ்சாவைப் பதுக்கி விற்பனை - இளைஞர் கைது

கோவை பூச்சியூரில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்துவந்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 550 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: பெரியநாயக்கன்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறூவதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில் நரசிம்மநாயக்கன்பாளையத்தை அடுத்த பூச்சியூரில் பெரியநாயக்கன்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் முரளி தலைமையிலான காவல்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் பெயர் விக்ரம் என்பதும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

மேலும், தற்போது கோவை கவுண்டம்பாளையத்தில் தங்கியுள்ள அவர், கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

விக்ரமை கைது செய்த பெரியநாய்க்கன்பாளையம் போலீசார், அவரிடமிருந்து 550 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். பின்னர், கைதான விக்ரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...