ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லூரியில் மாநில அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான போட்டிகள்


ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (NOVACEST) நோவாசெஸ்ட் விழா மற்றும் SKAவினாடிவினா போட்டி நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் முதன்மைச் செயல் அதிகாரி சுந்தரராமன் சிறப்புரையில் மாணவர்கள் கல்வி கற்பதற்கு நேரம், காலம் எண்ணாது, வகுப்பறை, பொது இடங்கள் என்றச் சூழல் கருதாது (E-Learning) இருபத்துநான்கு மணிநேரமும் படிக்கலாம் என்ற இணையதளத்துடன் இணைந்துள்ள நிலையாகிய (Online) வசதி வாய்ப்புகள் பெருகியிருக்கின்றன. அத்தகைய வாய்ப்பினை முறையான வகையில் மாணவர்கள் பயன்டுத்த வேண்டும் என்று கூறினார். 



கல்லூரி முதல்வர் ராதிகா மாணவர்களுக்கு உலகம் முழுவதும் கணினியுடன் நேரடித் தொடர்புடைய வசதிகள் சிதறிக் கிடக்கின்றன. கிடைக்கும் வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்துவதில்லை, எல்லோரும் அதனைப் பயன்படுத்திப் பயன்பெற வேண்டும் என தனது உரையில் கூறினார். SKA வினாடிவினா போட்டி  (Online) இணையதளத்துடன் இணைந்துள்ள நிலையில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கிடையே நடைபெற்றது. இப்போட்டியில் 400 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசாக ஸ்டேன்ஸ் பள்ளி மாணவர்களுக்கு சுழற்கோப்பையும் ரூபாய் 3000 பணப்பரிசாகவும் வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு பி.வி.பி பள்ளி மாணவர்களுக்கு ரூபாய் 2000 வழங்கப்பட்டது. (NOVACEST) நோவாசெஸ்ட் விழாவில் பல்வேறு போட்டிகள் நடைப் பெற்றன. கணினி அறிவியல், வணிகவியல், கணிதம் ஆகிய துறைகளில், துறை வாரியாகக் கருத்தரங்குகள், வினாடிவினா, வர்த்தகம், வார்த்தை விளையாட்டு எனப் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டியில் 400 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்க்கு முதல் பரிசு ரூபாய் 500, இரண்டாம் பரிசு ரூபாய் 300 எனப் பணப்பரிசும், மூன்றாம் பரிசு சான்றிதழுமாக வழங்கப்பட்டது. போட்டியில் பங்குபெற்ற அனைத்து மாணவ மாணவியர்க்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...