உலகில் சரியான நேரத்திற்கு விமானத்தை இயக்கும் டாப் 20 விமான நிலையங்கள் - கோவைக்கு 13வது இடம்!

உலகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் சரியான நேரத்திற்கு விமானங்களை இயக்கும் விமான நிலையங்களின் பட்டியலில் கோயம்புத்தூர் விமான நிலையம் 13வது இடத்தைப் பிடித்து இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ளது.



கோவை: உலகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் சரியான நேரத்திற்கு விமானங்களை இயக்கும் 20 விமான நிலையங்களின் பட்டியல் விமான நிலையங்களுக்கான அதிகாரப்பூர்வ கையேட்டில் (Official Airline Guide )வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள், அங்கிருந்து புறப்படும் விமானங்கள் ஆகியவை சரியான நேரத்திற்கு இயக்கப் படுகிறதா என்பதை மதிப்பீடு செய்து, On Time Performence (OTP) அடிப்படையில் ஒவ்வொரு விமான நிலையத்திற்கும் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, 20 விமான நிலையங்களின் பட்டியலில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 10 விமான நிலையங்கள் இடம்பெற்றுள்ளன.. அதுமட்டுமின்றி, 91.45%,91.44%,91.34%,90.78% சதவீத ஓடிபி-உடன் இந்தப் பட்டியலில் முதல் 4 இடங்களையும் ஜப்பானே பிடித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவின் டர்பன் கிங் சாஹா விமான நிலையம் 89.73% ஓடிபி-உடன் 5வது இடத்தில் உள்ளது. 6, 7,10,11,12வது இடங்களில் ஜப்பான் நாட்டு விமான நிலையங்கள் இடம்பெற்றுள்ளன. அதேபோல், பிரேசில், பனாமா, பெரு, ஈக்வேடார் நாடுகளைச் சேர்ந்த விமான நிலையங்கள் இடம்பெற்றுள்ளன.



இந்த சர்வதேச தரப்பட்டியலில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கோயம்புத்தூர் விமான நிலையம் 88.01% ஓடிபியுடன் 13வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவிலேயே கோயம்புத்தூர் விமான நிலையம் மட்டுமே, சரியான நேரத்திற்கு விமானங்களை இயக்கும் உலகின் 20 விமான நிலையங்களின் பட்டியலில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...