கோவை மதுக்கரை அருகே கிணற்றில் இருந்து விவசாயி சடலமாக மீட்பு - குடும்பத்தினர் சோகம்..!

மதுக்கரை அடுத்த அரிசிபாளையம் பகுதியை சேர்ந்த ரங்கசாமி (68) என்ற விவசாயி, அவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை அடுத்த அரிசிபாளையம் அருகேயுள்ள செட்டியார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (68).

விவசாயியான இவர், கடந்த 6 மாதமாக மனக்குழப்பத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர், வெளியில் சென்றுவிட்டு, 2 அல்லது 3 நாட்கள் கழித்து வீட்டுக்கு வருவார் எனவும் தெரிகிறது.

இந்நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்த ரங்கசாமி திடீரென மாயமானதாக தெரிகிறது. இரவு நீண்ட நேரம் ஆகியும் வராததால் அவரது மகன் வினோத் குமார் பல்வேறு பகுதிகளில் தேடி பார்த்துள்ளார்.

ஆனால் எங்கும் கிடைக்காததால், மீண்டும் வீட்டிற்கு வந்து விடுவார் என எண்ணி வினோத் குமார் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் காலை வழக்கம் போல வினோத்குமார் கிணற்றில் மோட்டார் போட சென்றுள்ளார்.

அப்போது ரங்கசாமி கிணற்றில் சடலமாக மிதந்தது தெரியவந்தது. இதையடுத்து வினோத்குமார் மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.



இதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரங்கசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...