'நீலகிரி மாவட்டத்தில் போதைப்பொருள் விற்றால் கடும் நடவடிக்கை' - எஸ்.பி எச்சரிக்கை

நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என்றும், மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் எச்சரித்துள்ளார்.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக இருந்த ஆசிஸ் ராவத் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து புதிய காவல் கண்காணிப்பாளராக கி.பிரபாகர் பொறுப்பேற்றுக் கொண்டார்.



இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள வணிகர் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினருடன் உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலக அரங்கில் இன்று அவர் ஆலோசனை மேற்கொண்டார்.



இதில், உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் மற்றும் பந்தலூர் உள்ளிட்ட 6 தாலுகாக்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



அப்போது பேசிய காவல் கண்காணிப்பாளர் பிரபாகர், "நீலகிரி மாவட்டத்தில் போதைப்பொருள் (குட்கா, பான்பராக் மற்றும் புகையிலை) போன்ற பொருட்களை வியாபாரிகள் விற்க வேண்டாம்" என்று அறிவுறுத்தினார்.



முன்னதாக வியாபாரிகள் மற்றும் வணிகர்களின் குறைகளையும் அவர் கேட்டறிந்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...