'மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்' - கோவை மாநகராட்சி ஆணையர் உத்தரவு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் உள்ள 52வது வார்டுக்கு உட்பட்ட ஹட்கோ காலனியில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல 52 - வது, வார்டுக்கு உட்பட்ட ஹட்கோ காலனி பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.



இந்த பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அப்போது, கட்டுமான பணிகளை விரைவாகவும், தரமாகவும் கட்டி முடிக்க வேண்டும் என ஆணையர் பிரதாப் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், கிழக்கு மண்டலம் உதவி ஆணையாளர் முத்துராமலிங்கம், வார்டு உறுப்பினர் அம்சவேணி, உதவி செயற்பொறியாளர் சுந்தரராஜன், சுகாதார அலுவலர் பரமசிவம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.



இதனைத் தொடர்ந்து, அதே பகுதியில் தெருக்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் முறையாக தரம் பிரித்து சேகரிக்கப்படுகிறதா? என்பது குறித்தும் மாநகராட்சி ஆணையர் ஆய்வு மேற்கொண்டார். இதனை பொதுமக்களிடமும் வலியுறுத்த வேண்டுமென தூய்மை பணியாளர்களிடம் ஆணையர் பிரதாப் அறிவுறுத்தினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...