'கோடங்கிபாளையத்தில் கல்குவாரி அமைக்கலாமா..?' - மக்களுடன் திருப்பூர் ஆட்சியர் ஆலோசனை!

திருப்பூர் மாவட்டம் கோடங்கிபாளையம் பகுதியில் கல்குவாரி அமைப்பது தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வினீத் தலைமையில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் கோடங்கிபாளையம் பகுதியில் கல்குவாரி அமைப்பது தொடர்பான கருத்துக்கணிப்பு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது.



இதில் கல்குவாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மற்றும் பல்லடம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள், கல்குவாரி அமைக்கப்படுவதால் தங்களது விவசாயம் பாதிக்கப்படும் எனவும், கால்நடைகள் வளர்ப்பதும் கேள்விக்குறியாகும் என்பதால் கல்குவாரி அமைப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.



கல்குவாரி உரிமையாளர்கள் சார்பில், குவாரி அமைப்பதால், விவசாயத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் சட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பாதுகாப்பு முறைகளும் பின்பற்றியே அமைக்கப்பட இருப்பதாகவும், மாவட்ட நிர்வாகம் நேரில் ஆய்வு மேற்கொண்டு அனுமதி வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.



இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் வினீத், அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...