கோவை குருடம்பாளையத்தில் பயனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கல்

குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வி.எஸ்.கே.நகர் மற்றும் வடமதுரை நியாய விலைக் கடைகளில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தினை ஒன்றியச் செயலாளர் கார்த்திக் தொடங்கி வைத்தார்.


கோவை: தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழக அரசு இன்று முதல் பொங்கல் சிறப்புத் தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு மற்றும் 1000 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.



இதன் ஒரு பகுதியாக, கோவை குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வி.எஸ்.கே.நகர் மற்றும் வடமதுரை நியாய விலைக் கடைகளில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சியினை ஒன்றிய செயலாளர் கார்த்திக் தொடங்கி வைத்தார்.



நிகழ்ச்சியில் ஒன்றியக் கவுன்சிலர் ஆறுச்சாமி, குருடம்பாளையம் ஊராட்சி துணைத் தலைவர் வசந்தாமணி விஸ்வநாதன், மாவட்ட பிரதிநிதி அருணா நகர் சண்முகம், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சகா விக்னேஷ், வார்டு கவுன்சிலர் வளர்மதி, கிளைச் செயலாளர் சுரேஷ், தினகரன், முன்னாள் ஒன்றிய பிரதிநிதி பூபதி, நிர்வாகிகள் அம்மன் கனகராஜ், ஸ்ரீதர், தில்லை நடராஜன், மணிகண்டன், தியாகராஜன், தலைமைக் கழகப் பேச்சாரளர் உடுமலை தண்டபாணி, ரஞ்சித், ஆறுமுகம், ஆட்டோ ஸ்டாண்ட் நண்பர்கள் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...