கோவையில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற இருவரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்..!

கோவை சிட்கோ அருகே மருத்துவ தம்பதியர் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்கள், தப்பிச்செல்ல முயன்ற நிலையில், பொதுமக்கள் பிடித்து போத்தனூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.



கோவை: கோவை மாவட்டம் சிட்கோ ஸ்ரீ சாய் நகர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கவாசகர் (57). மருத்துவரான இவர், கோவை கே.ஜி.சாவடி பகுதியில் மனைவியுடன் சேர்ந்து சிறிய கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் கிளினிக் சென்று விட்டு இருவரும் வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டுக்குள் செல்ல முயன்ற போது அவரது வீட்டில் இருந்து ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் இருவர் வெளியே ஓடி வந்துள்ளனர்.

இதை கண்டு இருவரும் சத்தம் போட்டதால், அங்கிருந்த பொதுமக்கள் தப்பிச் செல்ல முயன்ற இருவரையும் மடக்கி பிடித்தனர். இதையடுத்து போத்தனூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் பிடிபட்ட நபர்கள் திருப்பூரை சேர்ந்த இம்ரான் (34), சத்தியமங்கலத்தை சேர்ந்த பரத்குமார் (35) என்பது தெரியவந்தது. மேலும், கூலி வேலை செய்து வந்த இருவரும், திட்டமிட்டு மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றதும் தெரியவந்தது.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 15...