கோவையில் 'புகையில்லா போகி பண்டிகை' கொண்டாட வேண்டும் - கோவை மாநகராட்சி ஆணையர் வலியுறுத்தல்

போகிப் பண்டிகையையொட்டி கோவை மாநகராட்சியில் புகையில்லா போகிப் பண்டிகையை கொண்டாடும் விதமாக பொதுமக்கள் பழைய பொருட்களை தீயிட்டு எரிக்க வேண்டாம் என மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிக்கை.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் போகி பண்டிகையை முன்னிட்டு பழைய பொருட்களை தீயிட்டு எரிக்க வேண்டாம் என மாநகராட்சி ஆணையர் பிரதாப் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கோவை மாநகராட்சி பகுதிகளில்‌ வரும் 14.01.2023 அன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு “புகையில்லா போகி”யை கடைபிடிக்கும்‌ விதமாக கோயம்புத்தூர்‌ மாநகராட்சிப்‌ பகுதிகளில்‌ வசிக்கும்‌ பொதுமக்கள்‌ தங்கள்‌ வீடுகளில்‌ சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும்‌, மக்காத குப்பைகள்‌, அபாயகரமான குப்பைகள்‌ மற்றும்‌ இதர குப்பைகளை பொது இடங்களிலோ, குப்பைத்‌ தொட்டிகளிலோ மற்றும்‌ காலி இடங்களிலோ வீசி எரிய வேண்டாமென்றும்‌, தீ பற்ற வைத்து எரித்து விட வேண்டாம்.

பொதுமக்கள்‌ தங்கள்‌ வீட்டில்‌ சேகரிக்கப்படும்‌ குப்பைகளை தனித்தனியாக பிரித்து தினசரி குப்பைகளை சேகரிக்க வரும்‌ மாநகராட்சி தூய்மைப்‌ பணியாளர்களிடம்‌ வழங்கி “புகையில்லா போகி” பண்டிகையாக கடைபிடித்து, கோயம்புத்தூர்‌ மாநகராட்சிப்‌ பகுதியை தூய்மையாக வைத்துக்‌ கொள்ள பொதுமக்களுக்கு இதன்‌ மூலம்‌ தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது.

இவ்வாறு மாநகராட்சி ஆணையர் பிரதாப்‌ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...