கோவை துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா-வில் ஆட்சியர் சமீரன் ஆய்வு

கோவை துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா நிறுவனத்தில் உள்ள உற்பத்தி பிரிவுகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் நேரில் ஆய்வு செய்தார்.


கோவை: துடியலூரில் உள்ள துடியலூர் கூட்டுறவு விவசாய சேவை நிறுவனத்தில் பூச்சிக்கொல்லி மருந்து உற்பத்தி பிரிவு. விவசாய உபகரணப் பிரிவு, பெட்ரோல் பங்க் பிரிவு, விதை பிரிவு, அச்சகப் பிரிவு, பொது சேவை மையம், நுண்ணூட்டச் சத்து உரப்பிரிவு, சில்லறை விற்பனை பிரிவு செக்கு எண்ணெய் பிரிவு, ஆவின் பிரிவு ஆகிய பிரிவுகள் உள்ளன.



அதில், உரத் தயாரிப்பு பிரிவு, வேப்ப புண்ணாக்கு உற்பத்தி பிரிவு, நுண் ஊட்டச்சத்து உரப்பிரிவு, விதைப்பிரிவு, பூச்சிக்கொல்லி மருந்து பிரிவு மற்றும் சங்கத்தின் சேவை பிரிவுகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆய்வு செய்து, உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விவரங்கள் கேட்டறிந்தார். பொருட்கள் தரமாக உற்பத்தி செய்யப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தார்.



மேலும் வேளாண்மை துறையின் உற்பத்தி தடை நீங்கி மீண்டும் ஒதுக்கீடு பெற்று துவங்கப்பட்ட கலப்பு உரத்தயாரிப்பு பிரிவின் விற்பனையினை துவக்கி வைத்தார்.

அப்போது, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன், மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் இந்துமதி, டியுகாஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சிவகுமார், வேளாண்மை இணை இயக்குநர் முத்துலட்சுமி, கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் ஆய்வு; நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சரத்குமார்

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஆய்வு மேற்கொண்டு, முன்னாள் ப...

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...