முதுமலையில் வளர்ப்பு யானைகளுக்கு உடல் எடை பரிசோதனை முகாம்

நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு உடல் எடை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.



நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் 29 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தாயிடமிருந்து பிரிந்து தவிக்கும் காட்டுயானை குட்டிகள் மற்றும் பொதுமக்களை தாக்கி கொல்லும் யானைகளை பிடித்து வரப்பட்டு வளர்க்கபட்டு வருகின்றன. அதில் சில யானைகளுக்கு ஓய்வு அளிக்கப்பட்டும், சில யானைகள் கும்கிகளாகவும் உள்ளன.



இந்த நிலையில் யானைகளின் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காக, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை முகாமில் உள்ள யானைகளுக்கு உடல் எடை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.



அந்த பரிசோதனைக்கு பின் யானைகளின் உடல் எடைக்கு ஏற்ப உணவுகள் வழங்கபட்டு, உடல் பயிற்சிகள் வழங்கபடுகின்றன.



அதன் படி முதுமலை அருகே தொரப்பள்ளியில் உள்ள வனத்துறை சோதனை சாவடிக்கு யானைகள் அழைத்து செல்லபட்டு அவற்றின் உடல் எடை சோதனை செய்யப்பட்டது. வயதான யானைகள் மற்றும் மஸ்து யானைகள் தவிர்த்து முகாமிலிருந்த 19 யானைகளுக்கு உடல் எடை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...