முதுமலையில் வளர்ப்பு யானைகளுக்கு உடல் எடை பரிசோதனை முகாம்

நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு உடல் எடை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.



நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் 29 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தாயிடமிருந்து பிரிந்து தவிக்கும் காட்டுயானை குட்டிகள் மற்றும் பொதுமக்களை தாக்கி கொல்லும் யானைகளை பிடித்து வரப்பட்டு வளர்க்கபட்டு வருகின்றன. அதில் சில யானைகளுக்கு ஓய்வு அளிக்கப்பட்டும், சில யானைகள் கும்கிகளாகவும் உள்ளன.



இந்த நிலையில் யானைகளின் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காக, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை முகாமில் உள்ள யானைகளுக்கு உடல் எடை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.



அந்த பரிசோதனைக்கு பின் யானைகளின் உடல் எடைக்கு ஏற்ப உணவுகள் வழங்கபட்டு, உடல் பயிற்சிகள் வழங்கபடுகின்றன.



அதன் படி முதுமலை அருகே தொரப்பள்ளியில் உள்ள வனத்துறை சோதனை சாவடிக்கு யானைகள் அழைத்து செல்லபட்டு அவற்றின் உடல் எடை சோதனை செய்யப்பட்டது. வயதான யானைகள் மற்றும் மஸ்து யானைகள் தவிர்த்து முகாமிலிருந்த 19 யானைகளுக்கு உடல் எடை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...