'பொங்கல் தொகுப்பில் தேங்காயை சேர்க்க வேண்டும்..!' - கோவை துடியலூரில் பாஜக போராட்டம்

பொங்கல் தொகுப்பில் தேங்காயை சேர்த்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோவை துடியலூரில் பாஜக விவசாய அணி சார்பில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.



கோவை: தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையில், பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்போடு, தேங்காயும் சேர்த்து வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து தமிழக அரசை வலியுறுத்தி, "விலையில்லா தேங்காய் வழங்கும் கவனயீர்ப்பு போராட்டம் தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் நடைபெற்றது.



இதன் ஒரு பகுதியாக துடியலூரில் பாஜக மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தலைமையில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.



அப்போது பேசிய ஜி.கே.நாகராஜ், தென்னை விவசாயிகளின் வாழ்வதாரத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் தேங்காயின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழக அரசு மதிய உணவில் தேங்காய் பால் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் பேசிய அவர், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் எனவும், பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்போடு, தேங்காயும் சேர்த்து வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.



இந்த போராட்டத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட தேங்காய் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.



பாஜக நிர்வாகிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...