திருப்பூர் அருகே நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து கால்பந்து மைதானம் திறப்பு - பொதுமக்கள் போராட்டம்

நஞ்சராயன் குளத்தின் நீர்வழி பாதையை ஆக்கிரமித்து கால்பந்து மைதானம் கட்டிய தனியார் பள்ளியை கண்டித்து நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் திருப்பூர் மாவட்டம், கூலிப்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 440 ஏக்கர் பரப்பில் நஞ்சராயன் குளம் உள்ளது. இந்த குளத்தின் நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து, விகாஸ் வித்யாலயா பள்ளி நிர்வாகம், கால்பந்து மைதானத்தை கட்டி வருகிறது. இதற்கான திறப்பு விழா விரைவில் நடக்க உள்ளது.



நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து கால்பந்து மைதானம் கட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் கூலிப்பாளையம் நான்கு ரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்ககோரி கோஷங்களை எழுப்பினர்.



நஞ்சராயன் குளத்தை பாதுகாக்க கோரியும் நீர் வழிபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழக முதல்வரை சந்திக்க உள்ளதாக நஞ்சராயன்குளம் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈசன் முருகசாமி தெரிவித்தார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...