கோவையில் குடித்துவிட்டு தகராறு - தட்டிக்கேட்டவரை தாக்கிய 4 பேர் கைது

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் குடித்துவிட்டு சத்தம் போட்டுக் கொண்டிருந்தவர்களை தட்டிக்கேட்டவரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் லூனா நகர் பகுதியை சேர்ந்தவர் அன்புராஜ். இவரது வீட்டின் முன் நேற்று முந்தினம் 4 பேர் குடித்துவிட்டு சத்தம் போட்டுக்கொண்டிருந்தனர். அதிகமாக சத்தமிட்டு கூச்சலிட்டதால், அவர்களை அன்புராஜ் கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த நால்வரும், அன்புராஜை கடுமையாக தாக்கிவிட்டு தப்பித்துச் சென்றனர். காயமடைந்த அன்புராஜை, அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அன்புராஜின் கன்னத்தில் 3 தையல்கள் போடப்பட்டுள்ளன.

இதுகுறித்து துடியலூர் காவல் நிலையத்தில் அன்புராஜ் புகார் அளித்தார். இதன்பேரில், தாக்குதலில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த கார்த்தி, அழகர்சாமி, பூபேஷ், ஸ்ரீராம் என 4 பேரையும் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...