கோவையில் குடித்துவிட்டு தகராறு - தட்டிக்கேட்டவரை தாக்கிய 4 பேர் கைது

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் குடித்துவிட்டு சத்தம் போட்டுக் கொண்டிருந்தவர்களை தட்டிக்கேட்டவரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் லூனா நகர் பகுதியை சேர்ந்தவர் அன்புராஜ். இவரது வீட்டின் முன் நேற்று முந்தினம் 4 பேர் குடித்துவிட்டு சத்தம் போட்டுக்கொண்டிருந்தனர். அதிகமாக சத்தமிட்டு கூச்சலிட்டதால், அவர்களை அன்புராஜ் கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த நால்வரும், அன்புராஜை கடுமையாக தாக்கிவிட்டு தப்பித்துச் சென்றனர். காயமடைந்த அன்புராஜை, அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அன்புராஜின் கன்னத்தில் 3 தையல்கள் போடப்பட்டுள்ளன.

இதுகுறித்து துடியலூர் காவல் நிலையத்தில் அன்புராஜ் புகார் அளித்தார். இதன்பேரில், தாக்குதலில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த கார்த்தி, அழகர்சாமி, பூபேஷ், ஸ்ரீராம் என 4 பேரையும் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...