முதுமலை புலிகள் காப்பகத்தில் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சலால் 30 காட்டுப் பன்றிகள் பலி

முதுமலை புலிகள் காப்பகத்தில் வேகமாக பரவி வரும் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சலால் 30-க்கும் மேற்பட்ட பன்றிகள் உயிரிழந்து இருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


நீலகிரி: கடந்த சில நாட்களாக முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் 50-க்கும் மேற்பட்ட காட்டு பன்றிகள் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் தாக்கி இறந்து வருகின்றன. இந்த நிலையில் அந்த தொற்று முதுமலை புலிகள் காப்பகத்திலும் பரவி இருப்பது தெரிய வந்துள்ளது.



கடந்த 2 நாட்களில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட பன்றிகள் இறந்துள்ளன. அவற்றின் உடல்களை மீட்ட வனத்துறையினர் பிரேத பரிசோதனை செய்து எரித்து வருகின்றனர்.



குறிப்பாக இன்று மட்டும் 4 பன்றிகளின் உடல்களை கைப்பற்றி அவற்றின் உடல் பாகங்கள் சேகரிக்கபட்டு ரசாயன பரிசோதனைகாக அனுப்பி வைக்கபட்டுள்ளன.



இதனால் புலிகள் காப்பக வனத்துறையினர் அச்சமடைந்துள்ளனர்.

தற்போது இறந்துள்ள பன்றிகள் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு தினந்தோறும் வந்து உணவு சாப்பிட்டு செல்பவை என்பதால் வளர்ப்பு யானைகளுக்கு பரவி விடாமல் தடுக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன.



குடியிருப்பு பகுதிகள், யானை முகாம் பகுதிகளுக்குள் காட்டு பன்றிகள் வராமல் தடுக்க சுற்றி சேலைகள் கட்டபட்டுள்ளன.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...