போக்ஸோ வழக்கில் சாட்சியளித்த சிறுமியின் பெற்றோர் மீது தாக்குதல் - தந்தை, மகன் கைது

கோவையில் போக்ஸோ வழக்கில் சாட்சியளித்த சிறுமியின் பெற்றோரை தாக்கிய தந்தை மகனை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவையை சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், கரடிமடையை சேர்ந்த 20 வயது இளைஞர் ராகவேந்திரனை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு கோவையில் உள்ள போக்ஸோ வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது ராகவேந்திரன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின்போது, சிறுமியின் பெற்றோர் ராகவேந்திரனுக்கு எதிராக சாட்சியளித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ராகவேந்திரன் மற்றும் அவரது தந்தை ரங்கராஜன் சிறுமியின் வீட்டுற்கு சென்று அவரது பெற்றோரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையேடுத்து, ராகவேந்திரன், அவரது தந்தை ரங்கராஜன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...