முதல்வரிடம் மணிமேகலை விருது பெற்ற கோவை மாவட்ட மகளிர் சுய உதவி குழுவினருக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து..!

கோவை மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட "ஆட்சி மகளிர் சுய உதவிக் குழுவினர்" மற்றும் "ஜான்சி ராணி மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு மணிமேகலை விருதினை முதல்வர் வழங்கினார். விருது பெற்ற இரு மகளிர் சுய உதவிக் குழுவினரும் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.


கோவை: டிசம்பர் 29ஆம் தேதியன்று திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்கினார். மேலும் அந்நிகழ்வில் சிறப்பாக பணியாற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மணிமேகலை விருது உட்பட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.

அதன்படி, கோவை மாவட்டத்தை சார்ந்த சிறப்பாக செயல்பட்ட "ஆட்சி மகளிர் சுய உதவிக் குழுவினர்" மற்றும் "ஜான்சி ராணி மகளிர் சுய உதவிக் குழுவினர்" க்கு மணிமேகலை விருதினை முதல்வர் வழங்கினார்.



இந்நிலையில், விருது பெற்ற இரு மகளிர் சுய உதவிக் குழுவினரும் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.

விருது பெற்ற மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவரது வாழ்த்துக்களை தெரிவித்து, மேலும் சிறப்பாக செயல்படும்படி வாழ்த்தி ஊக்குவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...