பிரதமர் மோடியின் தாயார் மறைவு: கோவை பாஜகவினர் தீபங்கள் ஏற்றி அஞ்சலி..!

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கோவை மாவட்ட பாஜகவின் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மற்றும் பாஜகவினர் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.


கோவை: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் இன்று உடல்நலம் குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கோவை மாவட்ட பாஜகவின் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.



இதில், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மற்றும் பாஜகவினர் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.



இந்த அஞ்சலி நிகழ்விற்காக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அம்மன்குளம் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்ற மாற்றுத்திறனாளி பிரதமர் மோடியின் தாயார் படத்தை ஓவியமாக வரைந்திருந்தார்.



அந்த ஓவியத்தை சுற்றிலும் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், பிரதமர் மோடியின் தாயார் 100வது வயதில் இறந்துள்ளார். அவரது இறப்பிற்கு, பாஜக மகளிர் அணி சார்பாக பிரதமர் மோடி மற்றும் அவர்களது உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.

பிரதமரின் தாயார் கடுமையான வாழ்க்கை பின்னணிகளை சந்தித்து, எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து உன்னத தலைவரை நாட்டிற்காக கொடுத்து மிகப்பெரிய உத்வேகத்தை அவருக்கு அளித்து தவ வாழ்க்கையை வாழ்ந்துள்ளதாக, தெரிவித்தார்.

மேலும், இந்திய பெண்கள் அனைவரும் எளிமையான வாழ்க்கை வாழ்வதற்கு, இவரது வாழ்க்கை உத்வேகமாக உள்ளது எனவும் ஏழ்மை நிலையில் இருக்கக்கூடிய பெண்களுக்கு தங்களுடைய வாழ்க்கை மூலமாக உயர்ந்த தலைவர்களை தவப்புதல்வர்களை கொடுக்க முடியும் என்பதற்கான உதாரணமாக இவரது வாழ்க்கையை பார்ப்பதாக தெரிவித்தார்.

மேலும், இரங்கல் தெரிவித்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் சமூக தலைவர்களுக்கும் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார்.



சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி சங்கர் என்பவர் வரைந்த பிரதமரின் தாயார் ஓவியம் குறித்து பேசிய அவர், தெற்கு தொகுதியில் மாற்றுத்திறனாளிகள் குறித்து தெரிந்து கொள்வதற்காக அணுகிய பொழுது அவரைப் பற்றி தெரிந்து கொண்டேன், பிரதமரின் தாயார் ஓவியத்தை வரைந்த அவருக்கு தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...