கோவையில் எஸ்.பி.ஐ வங்கி ஜன்னலை உடைத்து கொள்ளை முயற்சி - அலாரம் ஒலித்ததால் மர்ம நபர்கள் தப்பியோட்டம்..!

கோவை சிட்கோ பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் ஜன்னல் கம்பிகளை ஆக்ஸார் பிளேடு மூலம் இரும்பு ஜன்னலை வெட்டி உள்ளே செல்ல முயன்றதும், அப்போது அலராம் ஒலித்ததால் அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது. குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.



கோவை: கோவை சிட்கோ பகுதியில் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்.பி.ஐ) நேற்று முன் தினம் வழக்கம் போல வங்கி மேலாளர் முன்னிலையில், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வங்கி மூடப்பட்டது.



இதையடுத்து மீண்டும் நேற்று காலை வழக்கம் போல் உதவி மேலாளர் வங்கியை திறந்துள்ளார். அப்போது, உள்ளே சென்று பார்த்த போது வங்கியில் இருந்த இரும்பு ஜன்னலை வெட்டி உள்ளே சென்ற மர்ம நபர்கள் திருட முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து, அவர் உடனடியாக போத்தனூர் போலீஸாருக்கு தகவல் அளித்தார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போத்தனூர் குற்றப்பிரிவு போலீஸார், ஜன்னலில் பதிவான கைரேகை உள்ளிட்ட தடயங்களை பதிவுச் செய்தனர். மேலும், வங்கியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், வங்கிக்கு திருட வந்த மர்ம நபர்கள் ஆக்ஸார் பிளேடு மூலம் இரும்பு ஜன்னலை வெட்டி உள்ளே செல்ல முயன்றதும், அப்போது அலராம் ஒலித்ததால் அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.

வங்கிக்குள் நுழைந்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். அதே பகுதியில், தொழிற்பேட்டை அமைந்துள்ளதால் எப்பொழுதும் ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் அமைந்துள்ள வங்கியை கொள்ளையடிக்க முயற்சித்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...