நீலகிரி கூடலூரில் கேஸ் சிலிண்டர் லாரியின் டயர் வெடித்து தீ பற்றியதால் பரபரப்பு - தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு..!

கூடலூர் நகரில் கேஸ் சிலிண்டர் ஏற்றிச் சென்ற லாரியின் டயர் வெடித்த விபத்தில், லாரியில் தீப்பற்றிய நிலையில், தீயணைப்பு துறையினர் விரைந்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததால், பெரும் விபத்து தவிர்ப்பு.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கேஸ் விநியோகம் செய்வதற்காக இன்று காலை ஒரு லாரியில் நூற்றுக்கும் மேற்பட்ட கேஸ் சிலிண்டர்கள் கொண்டு வரப்பட்டன.



இந்நிலையில் சிலிண்டர்களை ஏற்றி வந்த லாரி கூடலூர் நகரில் ராஜகோபாலபுரம் என்ற பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென பின்பக்க டயர் வெடித்தது. இதனால் டயரில் தீ பற்றி எரியத் தொடங்கியது.



இதனை கண்டு அதிர்ச்சியடைந்த லாரி ஓட்டுநர், லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கி, கூடலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக லாரியின் பின்பக்க டயரில் பற்றிய தீயை தண்ணீரை பீச்சி அடித்து உடனடியாக அணைத்தனர்.



மேலும் லாரியில் இருந்த சிலிண்டர்களின் மீதும் தண்ணீரை பீய்ச்சி அடித்து மேலும் தீ பரவாமல் தடுத்தனர். ஓட்டுனரின் சாதுர்யமான செயலாலும், விரைந்து வந்த தீயணைப்பு துறையினராலும் கூடலூரில் இன்று பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...