சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூ.152 உயர்வு - 41,000-ஐ நெருங்குகிறது ஒரு சவரன் தங்கத்தின் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்து, சவரன் ரூ.40,840 க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், தொடர்ந்து 40,000 ரூபாயை கடந்து தங்கம் விற்பனை செய்யப்படுவது வாடிக்கையாளர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.



சென்னை: சர்வதேச பொருளாதார சூழல், உலக சந்தையில் தங்கத்தின் மதிப்பு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் தங்கத்தின் விலை கடந்த அக்டோபரில் 40 ஆயிரம் ரூபாயை கடந்த நிலையில், செப்டம்பர் மாதம் முதல் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகிறது.

இதனிடையே இன்று சென்னையில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.19 உயர்ந்து ரூ.5,105 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை, ரூ.152 உயர்ந்து ரூ.40,840 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசுகள் அதிகரித்து ரூ.74.80 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஒரு சவரன் தங்கத்தின் விலை தொடர்ந்து 40 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்படுவதால், இனிமேல் அதை வாங்க முடியுமா? என பலரும் அச்சம் கொள்ள தொடங்கியுள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...