கோவை கரும்புக்கடை பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 83 கிலோ குட்கா பறிமுதல்….!

சாரமேடு, ராயல் நகர் பகுதியை சேர்ந்த குமரேசன் (48) என்பவரது வீட்டில் சோதனை செய்தபோது, அவரது வீட்டில் தடை செய்யப்பட்ட 83 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. குனியமுத்தூர் போலீசார் அவரை கைது செய்து குட்காவை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை கரும்புக்கடை பகுதியில் வீட்டில் வைத்து குட்கா விற்பனை நடப்பதாக குனியமுத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, குனியமுத்தூர் உதவி ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீசார் கரும்புக்கடை, சாரைமேடு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சாரமேடு, ராயல் நகர் பகுதியை சேர்ந்த குமரேசன் (48) என்பவரது வீட்டில் சோதனை செய்தபோது, அவரது வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அங்கிருந்த 83 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், குமரேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...