கோவை மாநகர ஆயுதப்படை காவலர்களுக்கான வருடாந்திர நினைவூட்டல் பயிற்சி முகாம் நிறைவு

கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்று வந்த மாநகர ஆயுதப்படை காவலர்களுக்கான 15 நாள் வருடாந்திர நினைவூட்டல் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் மாநகர காவல் ஆணையர் கலந்துகொண்டு பயிற்சி காவலர்களை பாராட்டினார்.



கோவை: தமிழகம் முழுவதும் ஆயுதப்படை காவலர்களுக்கான வருடாந்திர நினைவூட்டல் பயிற்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.



15 நாட்கள் நடைபெறும் இந்த பயற்சியில் நவீன ஆயுதங்களை கையாளுதல், லத்தி, கண்ணீர் புகை குண்டுகளை கையாளுதல், கலகக் கூட்டத்தை கலைத்தல், அணி வகுப்பு கவாத்து, கைதி வழிக்காவல் பணி, பண வழிகாவல் பணி, காப்புபணி, முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு பணி ஆகிய பணியின் போது செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை, மன அழுத்தம் கையாளுதல், உடல் நலம் பேணுதல், ஆரோக்கிய உணவு முறை, ஆகிய பயிற்சிகள் வழங்கப்படும்.



இந்த பயிற்சியின் நிறைவு விழா காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் பயிற்சி முடித்த காவலர்களின் கவாத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.



இதையடுத்து மாநகர காவல்துறையில் பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் ஆயுதபடை துணை ஆணையர் முரளிதரன், உதவி ஆணையர் சேகர், ஆய்வாளர்கள் கோவிந்தராஜூ, பிரதாப்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...