கோவையில் ஆட்சியர் தலைமையில் பிராணிகள் வதை தடுப்புச் சங்கம் பொதுக்குழு கூட்டம்

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தல் மற்றும் தொடர்ந்து குற்றம் புரிந்தால் கால்நடைகளை பறிமுதல் செய்வது பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கோயம்புத்தூர் மாவட்ட பிராணிகள் வதைத் தடுப்புச் சங்கம் பொதுக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது.



இந்த பொதுக்குழு கூட்டத்தில், கோவையில் உள்ள பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தல் மற்றும் தொடர்ந்து குற்றம் புரிந்தால் கால்நடைகளை பறிமுதல் செய்வது பற்றி விவாதிக்கப்பட்டது.



கூடத்தில், வள்ளலார் பல்லுயிர் காப்பக நிதி ஒதுக்கிட்டிலிருந்து உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் பல்வேறு ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு கோருவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், கால்நடைகளின் நலன் சார்ந்த செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டு, செயலாக்கம் செய்ய இக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.



இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக பொது மேலாளர் தீபக் ஜேக்கப், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் பெருமாள்சாமி, வனப்பாதுகாவலர் கோசாலா மற்றும் நிர்வாகிகள், தன்னார்வ தொண்டு நிறுவன ஆர்வலர்கள், விலங்கு பிரியர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...