கோவை சிங்காநல்லூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 36 சவரன் நகை மற்றும் பணம் திருட்டு

நீலிகோணாம்பாளையம் நேதாஜிபுரம் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 36 சவரன் நகைகள் மற்றும் ரூ.13 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.



கோவை: கோவை சிங்காநல்லூர் நீலிகோணாம்பாளையம் நேதாஜிபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (37). இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மனித வளத்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

கடந்த 24 ஆம் தேதி குடும்பத்துடன் கோவை வந்த ரமேஷ், திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது.



இந்நிலையில், நேற்று அவரது வீட்டின் அருகே வசித்து வரும் மகேஷ்வரி என்ற பெண், ரமேஷின் வீட்டுக்கே சென்று பார்த்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக, ரமேஷூக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து கிளம்பி வந்த ரமேஷ், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து

சிங்கநல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்தார்.



இதையடுத்து, கோவை விரைந்த ரமேஷ், வீட்டுக்குள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த சுமார் 36 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.13 ஆயிரம் திருடப்பட்டது தெரியவந்தது.



இதையடுத்து, தடயவியல் துறையினர் அங்கு பதிவான 6 கைரேகைகளை சேகரித்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், 36 சவரன் தங்க நகைகளுடன் தப்பிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...