திருப்பூரில் 10 க்கும் மேற்பட்டோரை கடித்த தெரு நாய்கள் - துரத்தி பிடித்த மாநகராட்சி ஊழியர்கள்: நிம்மதி அடைந்த மக்கள்..!

திருப்பூர் மாநகராட்சியில் 44 மற்றும் 45 வார்டுக்குட்பட்ட பகுதிகளில் 10 க்கும் மேற்பட்ட பொதுமக்களை கடித்த தெரு நாய்களை மாநகராட்சி அலுவலர்கள் 3 மணி நேரமாக துரத்தி பிடித்து சென்றதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் அதிகமாக சுற்றித் திரிவதால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் மாநகராட்சிக்கு உட்பட்ட 44 மற்றும் 45 வது வார்டு பகுதிகளில் இரவு நேரத்தில் சாலையில் சென்ற 10 க்கும் மேற்பட்ட பொதுமக்களை தெரு நாய்கள் கடித்துள்ளது. இதில் படுகாயம் அடைந்தவர்கள் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இரவில் 10 க்கும் மேற்பட்டவர்களை தெரு நாய்கள் கடித்து குதறிய செய்தியை கேட்ட அப்பகுதி மக்கள், அச்சத்தில் இன்று காலை முதல் வீட்டை விட்டு வெளியில் வரவே தயங்கும் சூழல் நிலவி வருகிறது.



இந்நிலையில் இதுகுறித்து பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு அளித்த புகாரின் பேரில், 44 மற்றும் 45 வது வார்டில் பொதுமக்களை கடித்த நாய்களை இன்று காலையில் மாநகராட்சி ஊழியர்கள் 3 மணி நேரமாக போராடி பிடித்துச் சென்றனர்.



இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

மேலும், இதேபோல், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு குடியிருப்பு மற்றும் பிரதான சாலைகளில் இரவு நேரங்களில் தெரு நாய்கள் தொல்லை பன்மடங்கு அதிகரித்து வருவதால், தெரு நாய்களை பிடித்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...