கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் - புதிய திட்டங்கள் குறித்து ஆலோசனை...!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில்அரசு அதிகாரிகளுடனான நடைபெற்ற ஆலோசனை கூடத்தில், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, சிறப்பு திட்ட செயலாக்கம், வறுமை ஒழிப்பு மற்றும் ஊரக கடன் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


கோவை: தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொருப்பேற்றது முதல் தமிழக முழுவதும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.



அதன் தொடர்ச்சியாக, கோவை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரு விளையாட்டு அரங்கில் செயற்கை இழை ஓடுதளம் உள்ளிட்ட பணிகளுக்கு பூஜை போடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.



தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், அரசு அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, சிறப்பு திட்ட செயலாக்கம், வறுமை ஒழிப்பு மற்றும் ஊரக கடன் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.



இந்த ஆலோசனை கூட்டத்தில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், வருவாய்த்துறை அதிகாரிகள், மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு, திட்ட செயலாக்கம் குறித்து விவரத்தினர்.



முன்னதாக, கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...