பெரியாரின் 49-வது நினைவு தினம்: அமைச்சர் செந்தில் பாலாஜி மரியாதை..!

கோவையில் பெரியாரின் நினைவு தினத்தையொட்டி, காந்திபுரம், பெரியார் படிப்பகத்தில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



கோவை: தந்தை பெரியாரின் 49-வது நினைவு தினம் இன்று (டிச.24) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பெரியாரின் சிலைகள் மற்றும் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வருகிறது.



முன்னதாக, தந்தை பெரியாரின் 49-வது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு கீழே உள்ள பெரியாரின் படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.



அதேபோல, கோவையில் பெரியாரின் நினைவு தினத்தையொட்டி, காந்திபுரம், பெரியார் படிப்பகத்தில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



இந்த நிகழ்ச்சியில், கோவை மாவட்ட திமுக சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் நா. கார்த்திக் வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, தெற்கு மாவட்ட செயலாளர், தளபதி முருகேசன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன், தந்தை திராவிட பெரியார் கழக பொதுச்செயலாளர், கு ராமகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி திமுக மாமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.





Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...