கோவை நவக்கரை அருகே விபத்து: கேரளாவை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவர் பலி..!

கேரளா மலப்புரம், மூர்க்கநாடு பகுதியை சேர்ந்த முகமது நாசில் (19) என்ற நர்சிங் மாணவர், நேற்று கோவைக்கு அவரது நண்பருடன் வந்து விட்டு, பைக்கில் மீண்டும் கேரளாவுக்கு சென்று கொண்டிருந்த போது, கே.ஜி.சாவடி அருகே கார் மீது மோதியதில் உயிரிழந்தார்.


கோவை: கோவை நவக்கரை அருகே முன்னால் சென்ற காரின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில், கேரளாவை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

கேரளா மாநிலம் மலப்புரம், மூர்க்கநாடு பகுதியை சேர்ந்த வீரான்குட்டி என்பவரது மகன் முகமது நாசில் (19). இவர் பெங்கலூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த முகமது நாசில் தனது நண்பரான முகமது பஜாஸ் (19) என்பருடன் தனது இரு சக்கர வாகனத்தில் கேரளாவில் இருந்து நேற்று கோவை வந்துள்ளார்.

பின்னர், மீண்டும் இருவரும் மாலை இரு சக்கர வாகனத்தில் கேரளா நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, கே.ஜி.சாவடி அடுத்த நவக்கரை அருகே முன்னால் சென்ற காரின் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தியதாக தெரிகிறது.

இதனால், கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் காரின் பின் பகுதியில் பலமாக மோதியது.



இதில், தூக்கி வீசப்பட்ட, முகமது நாசில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.



படுகாயமடைந்த பஜாஸ், சுந்தராபுரம் தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பாக கே.ஜி.சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...