கோவை நவக்கரை அருகே விபத்து: கேரளாவை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவர் பலி..!

கேரளா மலப்புரம், மூர்க்கநாடு பகுதியை சேர்ந்த முகமது நாசில் (19) என்ற நர்சிங் மாணவர், நேற்று கோவைக்கு அவரது நண்பருடன் வந்து விட்டு, பைக்கில் மீண்டும் கேரளாவுக்கு சென்று கொண்டிருந்த போது, கே.ஜி.சாவடி அருகே கார் மீது மோதியதில் உயிரிழந்தார்.


கோவை: கோவை நவக்கரை அருகே முன்னால் சென்ற காரின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில், கேரளாவை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

கேரளா மாநிலம் மலப்புரம், மூர்க்கநாடு பகுதியை சேர்ந்த வீரான்குட்டி என்பவரது மகன் முகமது நாசில் (19). இவர் பெங்கலூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த முகமது நாசில் தனது நண்பரான முகமது பஜாஸ் (19) என்பருடன் தனது இரு சக்கர வாகனத்தில் கேரளாவில் இருந்து நேற்று கோவை வந்துள்ளார்.

பின்னர், மீண்டும் இருவரும் மாலை இரு சக்கர வாகனத்தில் கேரளா நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, கே.ஜி.சாவடி அடுத்த நவக்கரை அருகே முன்னால் சென்ற காரின் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தியதாக தெரிகிறது.

இதனால், கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் காரின் பின் பகுதியில் பலமாக மோதியது.



இதில், தூக்கி வீசப்பட்ட, முகமது நாசில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.



படுகாயமடைந்த பஜாஸ், சுந்தராபுரம் தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பாக கே.ஜி.சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...