கோவையில் கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.6 கோடி மதிப்பிலான கட்டிடம் மீட்பு - இந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை

கோவை தெற்கு தாலுகா எல்லைக்குட்பட்ட, கோட்டைமேடு பகுதியிலுள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான 4500 அடி பரப்பிலான வணிக கட்டிடத்தை நீதிமன்ற உத்தரவின்படி இந்து சமய அறநிலையத் துறையினர் மீட்டுள்ளனர்.



கோவை: கோவை கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான ரூ.6 கோடி மதிப்புள்ள வணிக கட்டிடத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று மீட்டனர்.



கோவை தெற்கு தாலுகா எல்லைக்குட்பட்ட, கோட்டைமேடு பகுதியிலுள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான வணிக கட்டடம், நீண்ட நாட்கள் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது.



கட்டிடத்தை மீட்க நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கோவை மண்டல இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கருணாநிதி தலைமையிலான அதிகாரிகள் இன்று கோவிலுக்கு சொந்தமான 4,500 சதுர அடி பரப்புள்ள வணிக கட்டிடத்தை மீட்டனர்.

இது குறித்து, தெரிவித்த அறநிலையத் துறை அதிகாரிகள், இந்த கோவிலுக்கு சொந்தமான வணிக கட்டிடம், நீண்ட நாட்களாக குத்தகைதாரர் அல்லாமல் மூன்றாம் நபரின் ஆக்கிரமிப்பில் இருந்தது கண்டறியப்பட்டது.



இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுக்குப்பின், அந்த வணிக கட்டடம் கோவிலின் கட்டுப்பாட்டுக்கு இன்று கொண்டு வரப்பட்டது. மீட்கப்பட்டுள்ள இந்த வணிக கட்டடத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூபாய் 6 கோடி, என்றனர்.

இந்த நிலையில், கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தை தனியாரிடம் இருந்து மீட்ட இந்து சமய அறநிலையத் துறையிருக்கு கோவில் நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...