கோவை பம்ப்செட் நிறுவனங்களில் 30 ஆண்டுகளில் இல்லாத நெருக்கடி - 12 நாட்கள் கட்டாய விடுமுறை..!

ஜிஎஸ்டி, மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக பம்ப்செட் விலை உயர்வால் விற்பனை பாதிக்கப்பட்டு உள்ளதால் நெருக்கடியை சமாளிக்க மாதந்தோறும் 12 நாட்கள் கட்டாய விடுமுறை திட்டம் அமலாகி உள்ளதாக தகவல்.



கோவை: இந்தியா முழுவதும் வீடு மற்றும் விவசாயத்துக்கான பம்ப்செட் பயன்பாட்டில் கோவையில் உள்ள தொழில் நிறுவனங்கள் 50 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தொழிலில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

0.5 எச்.பி (குதிரை திறன்) முதல் அதிகபட்சமாக 50 எச்.பி மற்றும் அதற்கு மேல் திறன் கொண்ட பம்ப் செட்கள் கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களில் தயாரிக்கப்படுகின்றன. குறைந்தபட்சம் ரூ.1,500 முதல் அதிகபட்சமாக ரூ.4 லட்சம் மதிப்பிலான பல்வேறு மாடல்களில் பம்ப் செட்கள் தயாரிக்கப்படுகின்றன.

பம்ப்செட் விற்பனை மிகவும் குறைந்துள்ளதால் கோவையில் உள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்களில் மாதந்தோறும் 12 நாட்கள் கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டு வருவதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (சீமா) தலைவர் விக்னேஷ் கூறியதாவது, இந்த ஆண்டு நாடு முழுவதும் வழக்கத்தை விட பருவமழை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் விவசாய தேவைக்கான பம்ப்செட் விற்பனை மந்தமாக உள்ளது.

ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் மூலப்பொருட்கள் விலையும் தொடர்ந்து உயர்ந்து காணப்படுகிறது. இதனால் பம்ப்செட் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. விலை உயர்வு காரணமாக விற்பனை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்களில் மாதந்தோறும் 12 நாட்கள் (ஞாயிறு உட்பட) கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதேபோல், கோவை பம்ப்செட் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் மணிராஜ் கூறியதாவது,



கொரோனா நோய் தொற்று பரவலுக்கு பின் இன்று வரை பம்ப்செட் தொழில் குறிப்பாக குறுந்தொழில் நிறுவனங்கள் நெருக்கடியில் இருந்து மீள முடியவில்லை. பலர் தற்காலிகமாக உற்பத்தியை நிறுத்தி உள்ளனர்.

குறுந்தொழில்களுக்கு வழக்கமாக தமிழகம், கர்நாடகா, கேரளாவில் தான் அதிக விற்பனை இருக்கும். தற்போது விற்பனை மிகவும் குறைந்துள்ளது. 40 பேர் பணியாற்றிய குறுந்தொழில் நிறுவனங்களில் தற்போது 10 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். 30 ஆண்டுகளில் இல்லாத நெருக்கடியை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம்.

ஜிஎஸ்டி வரி, மூலப் பொருட்களின் விலையை மத்திய அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு அலுவலகங்களில் தேவைப்படும் பம்ப்செட் பொருட்களுக்கான தேவையில் குறிப்பிட்ட சதவீதம் குறுந்தொழில் நிறுவனங்களிடம் இருந்து பெறுவதை கட்டாயமாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...